உன்னை பத்துமாதம் கருவறையில் உன் தாய்
சுமந்தாள் அது அவளின்
கடமையாககூட இருக்கலாம்,
ஆனால் உன்னை
என் இதயம் என்னும் கருவறையில் சுமந்துகொண்டிருக்கிறேன்.
கருவறையில் இருந்து நீ வெளிவரும்போது
உன் தாய் அடைந்த வேதனையைப் போல்
உன்னைப் பிரிகின்ற ஒவ்வொரு விநாடியும்
என் இதயம் அதை உணர்கிறது.
என் இதயம் என்னும் கருவறையில்
வாழ்ந்துகொண்டிருக்கும் உன்னை
நான் இறந்த பின்பு கூட நிச்சயமாக சில
நிமிடங்கள் அது சுமக்கும்
No comments:
Post a Comment