Saturday 29 June 2013

காற்றாய் நான்

பார்வை ஒருமுறை படுவதற்கே
பல நாளாய் காத்திருந்தேன்
பட்ட மரம் துளிர்குமென்று
நம்பி நாளும் தவமிருந்தேன்...

கிளைகள் நிறைய காய்க்குமென்றே
ஆசையோட நீர் இறைச்சேன்
ஆணிவேரே இல்லையென்று
அப்புறம் தான் நானறிஞ்சேன்...

பட்ட மரம் பற்றி எரிய
காற்றிலே கரைந்து நான்போனேன்
காற்றாய் உன்னைக் கடப்பேனென்று
கனவில் கூட நானறியேன்...

உன் பார்வை இனிமேல் பட்டால்கூட
எனைக் கடந்து சென்றிடுமே
உன் சுவாசம் மட்டும் என்னில் கலந்தென்
காதல் மட்டும் வென்றிடுமே!


No comments:

Post a Comment