Friday 12 July 2013

நான்

பல வருட கனவு

எண்ணிலடங்கா உன் நினைவுகள்

என்னையே நான் மறந்த நாட்கள்

உன் ஒரு பார்வைக்காக காத்திருந்த தருணங்கள்

உன் கண்களை காண துடிக்கும் என் கண்ணீர் துளிகள்

நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்த்து இமைக்க மறந்த என் இமைகள்

உன் பாதச் சுவடுகளை பார்த்து பார்த்து தன் பாதையே மறந்த என் பாதங்கள்

கனவில் உன்னைக் கண்டதால் விழிக்க மறந்த எனது விழிகள்

உன் நிழலைத் தேடி அலைந்த என் நிஜங்கள்

உன் வருகையை தேடி தேடியே தொலைந்த என் நேரங்கள்

உன் பாதைகளை தேடிச் சென்ற என்னுடைய பயணங்கள்

உன் பெயரோடு சேர்ந்துவிட தவிக்கும் என் பெயர்

உன் வார்த்தைகளை உச்சரிக்க ஏங்கும் என் உதடுகள்

உன்  மௌனத்திற்கு உயிர் கொடுக்க துடிக்கும் என் மொழி

உன்  கனவுகளை களவாட நினைக்கும் என் கற்பனைகள்

உன்னுடனான பகலுக்காக ஏங்கும் என் இரவுகள்

நீ என்னை கடந்து செல்கையில் தன் வேளையையும் மறந்து துடிக்காமல் உன்னை கவனித்த என் இதயம்

உன்னை நினைத்து நினைத்து என்னையே இன்று மறக்க துணிந்த என் மனம்

உனக்காக என்னை மறந்த நான்.

No comments:

Post a Comment